அழகுத் தவம்

கண் சிமிட்ட நேரம் தேடுகிறேன் !
உன்னையே நினைத்துக்கொண்டிருப்பதால்..
கவிதையாய் வடிக்கிறேன்
உன்னைக் கண்டதால்..........
காற்றுகள் என்மீது மோதி நகர்த்துகின்றன
ஒரே இடத்தில நிற்பதால் .......
கண்ணீரே துணை என்று இருக்கிறேன்
உன்னைக் கண்ட நிமிடம் திரும்பாததால் .....
பனித்துளிக்கு கைகால் முளைத்து
பால் வண்ணத்தை உடலில் தெளித்து
உயர் கொண்ட தேவதையாய்
இந்த பூமியில் பிறந்து வளர்ந்து
பன்னீர் பூவின் உடல் போல மெல்லின வளைந்து
பட்டு ஜரிகையை போல கைகளைக் கொண்டு
எந்தன் பாறை மீது காற்று வீசுவது எப்போது ?

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (3-Oct-13, 6:36 pm)
Tanglish : alaguth thavam
பார்வை : 81

மேலே