நம்பலாமா நம்பக்கூ டாதா

எனைச் சுற்றிலும் இருப்பவர்களை
நம்பலாமா நம்பக்கூ டாதா
என்று நினைக்கையில்
நம்பாதே என்று உள்மனம்
சொல்லும் போது
சஞ்சலம் அடைகிறது .

காரியம் முடிந்த பின்
காலை வாரும் உறவினர்கள்
ஏமாற்றும் நோக்குடன்
செயல்படும் இரத்தப் பந்தங்கள்
அலைக்க ழிக்கப்பட்டு
துயரம் அடைந்த நாட்கள் எத்தனையோ!


சற்று திரும்பிப் பார்க்கும் போது
நிகழ்வுகள் நெகிழ்ச்சியடையச் செய்ய
கண்ணீர் கரை கட்ட
துளிரும் நீரை புறந் தள்ளி
நமக்கு விதித்தது இது தான்
என்று சமாதானமாகி வாழ்ந்து
காலத்தை கடக்கிறேன்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (27-Oct-13, 8:37 am)
பார்வை : 227

மேலே