புது கவிஞன்

கவிதை
எழுத ஆசைப்பட்டு
உரைநடையில்
ஒரு சில வரிகள்
எழுதினேன்
ஒன்று கூட
உரு தேறவில்லை
மல்லுகட்டி
கதை வடிவில்
கவிதை ஒன்றை
எழுதிவிட்டேன் -அதுவோ
காணாமல் போயிற்று
என் வ(லி)ரிகளை
ஓவியமாக வரையலாம்
என்றால்
நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்
இறுதியில்
கவிதை
எழுதியே தீரவேண்டும்
என்ற ஆர்வத்தில்
எழுதிவிட்டேன்
இதையே..............
கவிதையாக...!

எழுதியவர் : ராசி இல்லாதவன் (3-Nov-13, 7:44 pm)
Tanglish : puthu kavingan
பார்வை : 239

மேலே