விலையேற்றம்

ஓலை வீட்டில் இருந்தாலும்
ஒய்யாரமாய் நான் வாழ்ந்தேன்
ஒரு பிடி உண்பதற்கும் என்னை
ஒருமுறை கடித்து உண்பான்

உழைத்து வருபவனின் உடல்வலியையும்
என்னை ரசித்து சாப்பிட மறந்துபோவான்
இன்று எட்டிநின்று என்னை வேடிக்கை
பார்த்து விரைந்து செல்கிறான்

பணம்படைத்தவன் வாங்குகிறான்
மனம் வதங்க அறையில் கொட்டிவைக்கிறான்
குளிர்பதன பெட்டியில் போட்டு
என்னை கண்டபடி வாட்டுகிறான்

ஏழை என்னை உரிக்கையிலே கண்ணில்
கண்ணீர் வர வைத்தேன் நான்
இன்று அவன் என்னை தூரமாக
நினைக்கயிலே கண்ணீரில் நான் தவிக்கிறேன்

இந்த விலையேற்றம் எனக்கு வேண்டாமே
என்னை சுற்றி அன்பானவர்கள் காணோமே
என் விலையையும் இறக்கிடுங்க எனக்கு
பிடித்த இடத்தில் என்னை சேர்த்திடுங்க

இப்படிக்கு நானுங்க வெங்காயமுங்க...

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (4-Nov-13, 11:17 am)
Tanglish : vilaiyetram
பார்வை : 219

சிறந்த கவிதைகள்

மேலே