பித்தமும் இறங்கியது

நித்தம் நித்தம் பித்தம் பிடித்து
சத்தம் கித்தம் இல்லாமல் ஒரு
முத்தம் கேட்டேன் ....!!!

வெருண்டு மருண்டு ஒரு முறை
உச்சம் தலை குளிர முத்தம்
தருவாய் என்று
ஏங்கியிருந்தேன் .....!!!

அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் விட்டு
தருவாயென்றிருந்தேன் .....!!!

தூரத்தில் இருந்து ஒரு
குரல் உன் பெயரை அழைக்கவே
பித்தமும் இறங்கியது
முத்தமும் கலைந்தது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (16-Nov-13, 11:27 am)
பார்வை : 87

மேலே