ஏதோ ஒன்று என்னை பிடித்து

காத்து கருப்பு அடிச்சதோ...
பேய் பிசாசு பிடிச்சதோ...
அண்ட கூடாத
ஏதோ ஒன்று
என்னை பிடித்ததோ
பித்து பிடிச்சு
என் பிள்ளை சோறு தண்ணி
இறங்காம இப்படி திரியுதே
என்று தாய் புலம்பும் வேளையில்...

எந்த உயிரற்ற ஜடமும்
பிடித்து ஆட்டவில்லை...
இது வரை பார்த்ததை விடுத்து
பிடிக்காத வேலையை கொடுத்து
முதலாளி ஆட்டி படைக்கிறான்
என்று எடுத்து சொன்னால்
மார்பிலும் தோளிலும் தூக்கிப்போட்டு
வளர்த்த அந்த பேதை மனம்
புரிந்து கொள்ளுமா??

எழுதியவர் : சாந்தி (2-Dec-13, 11:10 pm)
பார்வை : 221

மேலே