வீடு

காடுகள் அளித்த நன்கொடை
மலைகளின் அழகிய இளவரசி
மேக கூட்டங்கள் விளையாடும்
இயற்கை கொஞ்சும் கொடைகானல்

அழகிய மலைகளின் ராணி  
மருத்துவ தைலத்தின் அதிபதி
எல்லாவகை தாவரங்களின் அடைக்கலம்
தொட்டபேட்டவை கொண்ட ஊட்டி

தெய்வத்தின் சொந்த நாடு
வியாதியே நீக்கும் ஆயுர்வேதம்
தென்னை தலையசைத்து வரவேற்க
மூணார், தேக்கடிகொண்ட கேரளம்

இயற்கை வளங்கொண்ட பிரதேசங்கள்
காணகண் பலகோடி வேண்டும்
மக்கள்படை ஊரும் மலைவாசதலங்கள்
செல்வோர் புகல்வது இயற்கைரசிக்க

(ஓகே ஓகே ஓகே
இம்மக்களில் பலர் வீடு வாங்க இடம் தேடும் போது)


காற்றுவசதி உள்ள மனை
வெளிச்சம் நிறைந்த மனை
நல்ல தண்ணீருள்ள மனை
நாங்கள் தேடும் மனை

(விருப்பத்திற்கேற்ப மனை அமைந்தது)

தென்னைமரம் வாவா என்றழைக்க
வேப்பமரமும் மாமரமும் கலகலக்க
வாசலில் தண்ணீர் சலசலக்க
அவரும் மனைவாங்க தலைஅசைக்க

(முதலில் தோட்டத்திற்கு நடுவில் வீடு அமைக்க திட்டம் பின்னர் இப்படியானது )

தென்னைமரங்கள் மறைந்து போயிற்று
ஒரு படுக்கைஅறை உட்தளம்மானது
மாமரமும் வேப்பமரமும் போயிற்று
இரண்டு படுக்கைஅறை உட்தளம்மானது

(என்ன நல்ல காற்று, தண்ணீர் இத்யாதி வேண்டும் என்றீர் என்றால் பதில் அருமை ஒரு சதுர அடி 20 ரூபாய் எனவே எனக்கு மாதம் ஆயிரங்கள் வருமானம் மரங்களினால் செலவு தான்)

(இவர்கள் அவர்கள் வீட்டில் இயற்கையே ரசிக்க மாட்டார்கள் வெளிஊரில் தான் ரசிப்பார்கள்) 

இயற்கை நேசிக்கப்பட வேண்டியது
இயற்கை அழிக்கப்பட கூடாதது
இயற்கைரசிதல் உன் முற்றத்து
காக்கும் இயற்கையெல்ல காலத்து

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (15-Dec-13, 11:46 pm)
Tanglish : veedu
பார்வை : 96

மேலே