வறுமையின் வெளிப்பாடு
நான்
உணவுயில்லாமல்...
பசியால்
இறந்துவிட்டால்...
ஊர் மக்களுக்கு
ஒரு விண்ணப்பம்/வேண்டுகோள் ...
என்
உடலை
எரித்துவிட வேண்டாம்..
புதைத்துவிடுங்கள்..!
அங்கேயாவது
கொஞ்சம் புல் வளரட்டும்...
அதை
அந்த ஆடுகளும்
மாடுகளும்
மாறி மாறி
மேய்ந்து
தங்கள் பசியை
போக்கி கொள்ளட்டும்..