+முத்தங்களால் யுத்தம் செய்+
கோபமாய்
என்னை முறைத்த
மிளகாய் விழிகளை கட்டு
ஆத்திரமாய்
வார்த்தைகளை உதிர்த்த
பாகற்காய் நாவினை விட்டு
வெகு நாட்களாய்
உனக்காய் காத்திருக்கும் இதயத்தினை
உன் மல்லிகை சிரிப்பினால் தொட்டு
ஆரம்பித்துவிடு
நீயுமொரு யுத்தம்..
முத்தங்களால் மட்டும்....