குழந்தையும் நாமும்
சிரிப்பு அங்கிருக்கும்
சிறகு நமக்குள் முளைக்கும்
அழுகை அங்கிருக்கும்
அலறல் நமக்குள் ஒலிக்கும்
உறக்கம் அங்கிருக்கும்
கனவுகள் நமக்குள் பிறக்கும்
வெட்கம் அங்கிருக்கும்
சொர்க்கம் நமக்குள் உதிக்கும்
விழிப்பு அங்கிருக்கும்
வெளிச்சம் நமக்குள் அடிக்கும்
உடல் அங்கிருக்கும்
உயிர் நமக்குள் துடிக்கும்!