அகவை நூறு

பதினெட்டு மாதத்தில் வடிக்கப்பட்ட சிலையே
தமிழின் பெருமைக்கு வைக்கமுடியாத விலையே

பதினெட்டாயிரம் டன் சல்லிகளும் எஃகுஇரும்பும்
ஐயாயிரம் டன் சாந்தும் கலந்த கலவையே

வருடங்கள் பல கடந்தும் ஒருமுறையே தன்னை
புதுப்பித்து மெருகேற்றிய குமரிப்பெண்ணே

கடல் கொந்தளிப்பு அதிகம் நிகழும்
பகுதியிலிருந்தும் சமாளித்து பிரச்சனை
காட்டிகொள்ளாத குடும்ப பெண்ணே

காலங்கள் கடந்தும் வருவோர்க்கு கம்பீரமாய்
காட்சி தரும் எழிலோவிய மழலையே

தனுஷ்கோடி புயலிலும் சிறிதும் ஆட்டம்
காட்டாமல் வலிமை மிகுந்திருந்த ஆண்மையே

இரண்டு கிலோ மீட்டரில் கால் நீட்டி உறங்கும்
வயோதிக கொள்ளு பாட்டியே (தாத்தாவே)

வருவோரை மடியில் சுமந்து வழிகாட்டி
உரிய இடம் சேர்க்கும் தாய்மையே

இந்தியநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும்
இணைக்கும் ஒரே இணைப்பு பாலமென
சிறந்து விளங்கும் குருவே

இன்றோடு உனக்கு அகவை நூறு - என்றும்
சிறக்கும் உன்னால் தமிழனின் பேரு

...கவியாழினிசரண்யா ...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (24-Feb-14, 10:17 am)
Tanglish : akavai nooru
பார்வை : 186

மேலே