குடும்பம் ஒரு கதம்பம்
(LKG படிக்கும் மகன் அம்மாவிடம்..)
மகன் : ஏம்மா உன் பேரு என்ன?
அம்மா : ஏன்டா கண்ணா...தெரியாதமாதிரி கேட்குற...?
மகன் : சொல்லும்மா...
அம்மா : கல்யாணி...
மகன் : அதில்லமா..இன்னொரு பேரு...
அம்மா : இன்னொரு பேரா...எனக்கு ஒரு பேருதான் செல்லம்...
மகன் : இல்லையே...நேத்து அப்பா,எதுத்த வீட்டு அங்கிள்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது சொன்னத நான் கேட்டேனே....
அம்மா : என்ன பேரு சொன்னாரு...
மகன் : இரத்தக்காட்டேரி ன்னு சொன்னாரு... அப்படின்னா என்னதும்மா?