என் இனத்தின் வலி

கருவறையில்
உயிரை கொன்ற பின்
தொட்டில்களை பரிசளித்து
பயண் காண்பதென்ன?

காற்றை நிறுத்தி விட்டு
கருணை காட்டி என்ன ?

நிலத்தை அழித்து விட்டு
விதைகள் தந்து எதற்கு ?

கைகளை அறுத்து விட்டு
துப்பாக்கிகளை
தூக்கி தந்து என்ன ?

உயிர்களை கொன்று விட்டு
உறைவிடங்கள் கட்டுவது
யாருக்கு ?

மானத்தை அழித்துப் பின்
நீதி கிடைத்து என்ன ?

இனத்தை அழித்தப் பின்
ஆறுதல் சொல்லி என்ன
விசாரணை செய்தும் என்ன ?

வடியும் கண்ணீரை
வடிகால் அமைத்து
நாடுகளுக்குள் அனுப்பினால்
பல நூறு சுனாமிகள்
தாண்டவமாடும் ...!
என் இனத்தின் வலி
நிச்சயம் ஒரு நாள்
களமாடும் ....!

எழுதியவர் : Raymond (30-Mar-14, 7:10 pm)
சேர்த்தது : Raymond Pius
Tanglish : en inaththin vali
பார்வை : 315

மேலே