கண்ணீர் பூ

மௌனமாய் தாக்கிவிட்டாய்
மரணமின்றி இறக்கிறேன் நான்...
பெண்ணுருவாய் நீ இருக்க
ஆணுறவாய் நான் "இறுக்க"
சீன்டி சிணுங்கி தூரம் செல்ல -நீயென்ன
தீண்டாமை இனத்தவளா?
யுகம் யுகமாய் நீண்டாலும் - நினை
அகம் மட்டும் நினைத்தபடி...
நீர்க்காத காதலுடனும் - கண்ணில்
நீர்த்துவிட்ட துளி உடனும்
காத்திருந்து தான் பார்கிறேன்
'கானலான" நீ என்று
"காணல்" லாய் வருவாய் என்று?
உன் அருகாமையின் இதம் கேட்கிறேன்
அரை நொடியாவது எழுந்து வா- என்
கண்ணீர் சிந்தி பூக்க வைய்த்த
(உன்) கல்லறைலிருந்து...

எழுதியவர் : yazhl (11-Apr-14, 6:45 pm)
Tanglish : kanneer poo
பார்வை : 157

மேலே