அவள்

ஆத்தோரம் நடக்கையிலே
அழகாய் வீசும் தென்றலவள்....
மலையோரம் நடக்கையிலே
தத்தி ஓடும் மான் அவள்...!
காட்டோரம் நடக்கையிலே
தோகை விரிக்கும் மயில் அவள்...
பாலையோரம் நடக்கையிலே
தாகம் தீர்க்கும் நீர் அவள்...
என் அருகில் வரும் போது மட்டும் ஏனோ
கொடூர மிருகம் ஆகிறாள்...!
-ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (29-May-14, 12:27 pm)
Tanglish : aval
பார்வை : 119

மேலே