யானை மலை கவிஞர் இரா இரவி

யானை மலை ! கவிஞர் இரா .இரவி !

யானையே மலை போல இருக்கும் !
இந்த மலையோ யானை போல இருக்கும் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த
மதுரைக்கு வருவோரை வரவேற்கும் மலை !

பார்த்தால் யானை போல இருக்கும் !
நெருங்கினால் பிரமாண்டமாக இருக்கும் !

இப்படி ஒரு மலை நீங்கள் வேறு
எங்கும் காண முடியாது !

கல்லால் ஆன இமயம் கண்டதுண்டா !
காண்போர் உள்ளம் கவரும் காந்தம் !

இயற்கையின் இனிய அன்பளிப்பு !
ஈடு இணையில்லா பிரமிப்பு !

காணமல் கடக்க முடியாது !
கண்ணிற்கு இனிமை நல்குவது !

மதுரையை விட்டு வெளியேறும்
மக்களுக்கு பிரியாவிடை தரும் மலை !

மழை பெய்யும்போது இந்த
மலை ரசிக்க விழி இரண்டு போதாது !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (2-Jun-14, 9:03 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 239

மேலே