ther
தேர்
ஊஞ்சலாடின கைகள்
வரைந்த கோட்டிற்குள்
கால்கள் நடை போட...
வஞ்சனை இல்லாமல்
வாஞ்சையுடன் வீசின காற்றில்
அனிச்சையாய் ஓடின தூசியும்
காய்ந்த மலர்களும் கண்டு
உருண்டன கருவிழிகள் தொடர்ந்து...
எதையோ சிந்தித்த பளு தாங்காமல்
வந்த நீண்ட பெருமூச்சும்
காற்றோடு கலந்தது...
சூரியனை ஒளித்து விளையாடின
மேகங்களும் பயணிக்க
என் பயணமும் தொடர்ந்தது...