ther

தேர்

ஊஞ்சலாடின  கைகள்
வரைந்த  கோட்டிற்குள் 
கால்கள்  நடை போட...
வஞ்சனை இல்லாமல் 
 வாஞ்சையுடன்  வீசின காற்றில் 
அனிச்சையாய் ஓடின தூசியும் 
காய்ந்த மலர்களும் கண்டு 
உருண்டன கருவிழிகள் தொடர்ந்து...
எதையோ சிந்தித்த பளு தாங்காமல் 
வந்த நீண்ட பெருமூச்சும் 
காற்றோடு கலந்தது...
 சூரியனை ஒளித்து விளையாடின 
மேகங்களும் பயணிக்க 
என் பயணமும் தொடர்ந்தது...

எழுதியவர் : aadhee (13-Jun-14, 9:40 pm)
பார்வை : 57

மேலே