காதல் வாழ்கிறதா
பாலை வனத்தில் பருந்துகள் ருசிக்க,தூசியாய் என் இருதயத்தை தூக்கி எறிய எப்படி துனிந்தாய்,,
எப்போதும் உன்னோடே என் ஜீவன் என்று.,
எழுத சொன்ன விரல்கள் ,
எப்படி உன்னோடு உலவிக்கொண்டிருக்கிறது,
ஏமாற்றத்தின் விதைகளை
என்னுள் தூவி விட்டு,
சிரிப்பின் சிகரத்தில் உன்னால்
மட்டும் எப்படி இலயிக்க முடிகிறது,.
காதல் உனக்கென்ன
காகிதப்படகா
மழைக்காலத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொள்ள,,
உன் நிழல் கூட கலங்கப்பட்டு
கண்ணீர் வடிக்கும்
நம்பிக்கை துரோகத்திற்காக,,
காலம் கடத்த காதலா
காதல் வரலாறு உன்மேல்
காரி உமிழும்,,
இடி விழுந்த மரமாய்
உன் கலியுகப் பாதை
கலைந்தே போகும்,,
இனி ஒருமுறை காதலின்
பெயரில்
ஏமாற்றுப்பயணம் செல்ல
யாரையும் அழையாதே,,
என் போன்ற ஆணை
இனி ஒருமுறை
மரணத்தில் தள்ளாதே,,,,