காதல் தரிசனம்

இந்த மாலை
நேரத்தில்
நான் மட்டும்
தனியே
கோவிலுக்கு
சென்றுவிட்டு
வீடு திரும்புகையில்
இன்னமும்
உன்னுடன்
கைபிடித்து
நடந்து கொண்டு
வேண்டிய
தரிசனங்களின்
காட்சி
ஒவ்வொன்றாக
மீள்கிறது;
சீரான வரிசையில்
உள்ளே நுழையும் பொழுது
சட்டென
என் கைகளை
உன் கையுடன் சேர்த்து
இருவரும் ஒன்றாக
வலது கால் எடுத்து வைத்து
சென்றது;
சாமி கும்பிட்டபின்
கற்பூர ஆரத்தியினை
நீ தொட்டு
வணங்கியது;
எல்லோரும்
கண்ணாடி பார்த்து
பொட்டு வைக்கையில்
அதை பார்க்காமலே
பொட்டு வைக்க சொல்லி தந்தது;
நான் தான் வைப்பேன்
என என் நெற்றியில்
நீ வைத்து விட்ட
சந்தனத்தின் ஈரம்
திருநீறின் வாசம்
இன்னமும்
அப்படியே இருப்பதுபோல
இருக்கிறது;
மொத்தமாக
எல்லாமும்
என் இதழ்களின்
ஓரத்தில் புன்னகையாய்
மலர்ந்து பின்
உதிர்க்க தொடங்கியது
ஞாபக பூக்களை.

எழுதியவர் : பிரபா (25-Jun-14, 6:35 pm)
Tanglish : kaadhal tharisanam
பார்வை : 119

மேலே