விடியல் தேடு பெண்ணே

விடியல் தேடு பெண்ணே!

கருவிலே உருவம் கொடுத்து
கண்ணிலே வெளிச்சம் கொடுத்து
சிந்திக்க அறிவை கொடுத்த
சிறந்த எண்ணங்கள் கொடுத்து
காதலெனும் உணர்வையும் கொடுத்து
அதோடு
காமமெனும் பசியையும் கொடுத்தான்
இறைவன். ...

இதழ்களில் தேன்தடவி
இனித்திட பேசி பேசி
கண்களால் வலை வீசி
காமவெறி கொண்டு
பெண்களின் புனிதம் மறந்து
துரோகமுட்களால் துவம்சம்
செய்கிறான் மனிதன். ..

மலரென்று வர்ணித்து பெண்ணே
உனை
மவுனமாக்கி விட்டான்
அழகென்று சொல்லி உன்னை
அழ வைத்து விட்டான்
உயிரே என்றழைத்து உனை
உருக வைத்துவிட்டான். ..

பெண்ணே நீ பேதையா இல்லை
மேதையா...
விண்ணில் சிரித்திடும் நட்சத்திரங்கள்
மண்ணுக்கு வருகுது இந்த
பெண்மையின் மென்மையறியா மூடர்களை தண்டிக்க. ....

பெண்ணே
சிதறிடும் உன் சிந்தனைகளை
ஒன்றாக்கு
சிகரம் நோக்கிய உன் பயணத்திற்கு
மனதின் எண்ணங்களை வலுப்படுத்து
மனிதமிருகங்களிடமிருந்து விடுதலை பெற!

உன்மீது நீ நம்பிக்கை கொள்
உருகி உருகி எவன் உயிர் விடத்
துடித்தாலும் உன்
உறுதியில் உடைந்து விடாதே

சோர்ந்திடாமல் போராடு
சுதந்திரமாய் முடிவெடு
சுடர்ஒளியாய் பிரகாசித்திடு. உன்
விழியாலே விரைந்திங்கு
விடியல் தேடிடு பெண்ணே. ..

(அடிக்கடி இப்போது கற்பழிப்பு கொலை...அதற்காக எழுதப்பட்டது)

எழுதியவர் : நிஸா (11-Jul-14, 1:01 pm)
Tanglish : vidiyal thedu penne
பார்வை : 87

மேலே