மேதினியில் என்றும் பெண்மையே​​

​மெல்லிய மலரிதழின் மென்மையே
--மேதினியில் என்றும் பெண்மையே !
​உருகிடும் உள்ளங்கள் உண்மையில்
--உலகினில் என்றும் பெண்ணினமே !

தாய்மை உணர்வின் உன்னதத்தை
-- உலகிற்கு உரைப்பவர் பெண்களன்றோ !
பாசமெனும் வற்றாத நீர்வீழ்ச்சியும்
--பாரினில் மகளிரின் மனங்களன்றோ !

மெழுகாய் உருகிட்டு ஒளிர்ந்திடும்
--இல்லத்தின் இருள்நீக்கும் இதயங்கள் !
வரவையும் செலவையும் எடைபோட்டு
--இல்லறத்தை நடத்திடும் தராசுகள் !

எளிதில் உடைந்திடும் உள்ளங்களே
--எதையும் தாங்குபவரும் பெண்களே !
அளவிடவும் முடியாது ஆழ்மனதை
--அறிவதும் அரிதன்றோ பெண்மனதை !

பொங்கிடும் உணர்வுகள் தேங்கினாலும்
--பொறுமை காத்திடும் பெண்மனம் !
பெருமையுடன் வாழ்ந்திடும் தமிழினம்
--பெரும்பங்கு வகிப்பதும் பெண்ணினம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Jul-14, 8:49 am)
பார்வை : 219

மேலே