கேள்வியும் நானே பதிலும் நானே

நானே கேள்வி நானே பதில்.

பிரிக்க முடியாதது?
குடும்பமும் அரசியலும்.

பிரிக்கக் கூடியது?
அரசியலும் பொதுநலமும்.

பிரிந்தே இருப்பது?
உண்மையும் அரசியலும்.

சேர்ந்தே இருப்பது?
பொய்யும் அரசியலும்.

அரசியல் வேசம்?
ஜனநாயகம்.

அரசியல் நிசம்.
வாரிசு.

அரசியல் என்ன செய்யும்?
ஏமாற்றும்

ஏமாறுவது?
தொண்டன்.

அரசியலின் பின்னணி?
வர்த்தகம்.

உண்மையின் அடையாளம்?
அப்பாவித்தனம்.

தன் மக்களுக்காக?
அரசியல்.

நாட்டு மக்களுக்காக?
மேடைப்பேச்சு.

சந்தர்ப்பவாத அரசியல்?
தந்திரம்.

நிலைமாறா அரசியல்?
ஏக்கம்.

சுயநல அரசியல்?
உண்மை.

பொதுவாழ்வு அரசியல்?
பொய்.

அண்ணாவால் பிழைப்பது?
திராவிடக் கட்சிகள்.

அண்ணாவில் வாழ்வது?
தமிழ்.

பொய்யின் அடையாளம்?
கட்சிகள்.

உண்மையின் அடையாளம்?
தலைவர்களின் படங்கள்.

வீடென்றால்?
பாசம்.

நாடென்றால்?
வேசம்..

அஞ்சும் நெஞ்சம்.
உரிமை.

அஞ்சா நெஞ்சம்?
ஊழல்.

வெட்கம் உணராதது?
அரசியல்.

ஊழல் உதயம்?
அரசியல்.

பொய்யின் அடையாளம்?
அரசியல்.

வாக்குரிமை?
மோசடி.

நாக்குரிமை?
புலம்பல்.

எழுத்துரிமை?
கிறுக்கல்.

பாவம்?
மக்கள்.

சாபம்?
சுதந்திரம்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (31-Jul-14, 11:41 am)
பார்வை : 282

மேலே