இன்றய அரசியல்

அன்று காந்தி மகான் பெற்றான்
சுதந்திர இந்தியாவை மக்கள் துணையோடு,
இன்று அரசியல்வாதி சுரண்டுகிறான்
சுதந்திர இந்தியாவை மக்கள் துணையோடு,
இளைஞனே இன்று நீ தூங்கினால் நாளை
உன் விடியல் திருடப்படும்
உணர்வால் வேறுபடும் நாம்
கொள்கையால் ஒன்றுபடுவோம்
ஆயுதம் எடுக்கும் இளைஞனே
அன்று காந்தி உன்னைப்போல் இருந்திருந்தால்
இந்தியா அன்று வென்று இருக்குமா
இந்தியா மீண்டும் மலர
மற்றும் ஒரு போராட்டம்
மகத்தான போராட்டம்
தீவிரவாதியாக அல்ல
அரசியல்வாதியாக ............
இந்த அணி அந்த அணி எந்த அணி
அரசமைத்தாலும்.,
ஊழல் ஒழியாது , இலவசம் அழியாது
விவசாயம் வளராது ,லஞ்சம் கரையாது
வேலையின்மை பெருகும்....
இன்று இனத்தால் மொழியால் குணத்தால்
வேறுபடும் நாம் ஒன்றிணைவோம்
சமுக வலைத்தளத்தில்.......
ஊழல் செய்யும் கூட்டத்தினை
ஊதித் தள்ளி சென்றிடலாம்
அரசியல் சாக்கடை என்று ஒதிங்கிநின்றால்
அரிசியும் நாளை சாக்கடையாகும்......
பண அரசியலை விரட்டி,
குண அரசியலை புகுத்தி,
இளைஞனை நிறுத்தி,
கிழடுகளை விரட்டி,
புது அரசியல் அமைத்து
பாரத மாதாவை காப்போம் ...........

எழுதியவர் : எஸ் பீ கே (23-Mar-11, 2:47 pm)
பார்வை : 680

மேலே