நான் வாழ நீ வேண்டும்

என் நிழல் போல
நீ என்றும் என்னோடு
உன்னை தொடும் போது
புயல் வந்து தாக்குது
உன் பார்வை
தினம் என்னை
விஷம் போல கொல்லுது
இனி நான் வாழ
நீ வேண்டும் என் நெஞ்சோடு
தொடும் தூரம் நீ இருந்தும்
தொலை தூரம் போல் தெரிகிறதே
உன்னை தொட தினம் ஏங்கி
எனை நானே தொலைத்தேனே
என் கண்முன்
கனம் தோன்றி மறையும்
கானல் நீரும் நீதானோ
என் பாலைவன பூமியிலே
உன் முத்தம் சிறு தூவானமாய்
தூவாதோ
உன்னை
காதலிப்பதால்
நானும் கவிஞனடி
நீ என்னோடு பேசினால்
நானும் குழந்தையடி
உன்னை காணாமல்
என் விழிகள் வாடுதே
உன்னை சேராமல்
என் ஆயுள் குறையுதே
ஓ பெண்ணே ...!
என் விழியோடு நீ வந்து
குடியேறு - இல்லை
உன்னை பார்க்க சொல்லி
என் விழிகள் தினம் மன்றாடும்
ஏனோக் நெகும்.