14-09-2014----பிரார்த்தனை

ஒடுக்கப் பட்டவர் உயர்ந்தே எழுந்திட ஒளியை வீசும் வார்தைகள்,
=உணவில் லாதவர் உயிரைக் காத்திடும் உரிமை சேர்த்திடும் வார்த்தைகள்,
அடைக்கப் பட்டவர் அடிமைப் பூட்டுகள் அடித்தே நொறுக்கும் வார்த்தைகள்,
=அமைதி யற்றவர் அழுத்தும் துயர்களை அழித்தே தேற்றும் வார்த்தைகள்,
மடக்கப் பட்டவர் முட்டிகள் நிமிர்த்து மயக்கம் போக்கும் வார்த்தைகள்,
=மறுக்கப் பட்ட உறவுக ளுக்கு மார்க்கம் காட்டும் வார்த்தைகள்
கெடுத்துப் பிழைப்போர் கீழ்மைத் தனங்கள் கவிழ்த்துப் போடும் வார்த்தைகள்
=கேட்கும் நடத்தும் கர்த்தர் தாமே, கூட்டி எழுதச் செய்யுமே!
***+++****

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (14-Sep-14, 6:16 pm)
பார்வை : 315

மேலே