எழுதுக்கோலில் நான் நுழைய - இராஜ்குமார்
எழுதுக்கோலில் நான் நுழைய
==========================
உன்னை ரசித்தேன்
அதனால் சிரித்தேன்
உன்னை நினைத்தேன்
அதனால் அழுதேன்
புறம் சென்ற நினைவு
அகம் நிறைவது ஏன் ?
உருவாகும் உணர்வு
உனை கேட்பது ஏன் ?
கலைந்த கனவை
கோர்க்க நினைத்து
முடியாத நினைவில்
தாள்களுக்கு தண்டனை
அளித்தே தினம் உயிர்க்கிறேன்
எழுதுக்கோலில் எனை நுழைத்ததால் ..
- இராஜ்குமார்
நாள் :18 - 10 - 2011