அவரோட தலைமாட்டில்

ஒளியூட்டி
வழி காட்டி
உற்ற துணையாய்
காலம் முழுதும்
கூட இருந்த
கை விளக்கை

எடுத்து நடக்கையிலே
மூச்சு பட்டு
அணையுமின்னு
பெரிசு ஒன்னு
மூச்சை கொஞ்சம்
அடக்கி விட

பெரிசோட உசிரு
அணைந்து விட
விட்டு பிரியாத
கைவிளக்கோ
அணையாமல்
அவரோட தலைமாட்டில்.

எழுதியவர் : கோ.கணபதி (6-Oct-14, 8:53 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 47

மேலே