துகிலாத நினைவுகள்

நினைவுகள்!
சிந்தனைகளில் எண்ண ஓட்டங்களாய்
இதயத்தில் சிறு கீறல்களாய்
இதழ்களை குவியவைக்கும் நிகழ்வுகளாய்
மண்ணை முத்தமிட்ட மழை துளியாய்
வானம் அரவணைத்த வானவில்லாய்
தேகம் வருடும் பூந்தென்றலாய்
தூவல் அறியாத வண்ணமாய் -எந்த
கவிதையும் ருசிக்காத எதுகையாய்
உளி ஸ்பரிசிக்காத சிற்பமாய் -மன
சிந்தைகளின் சிதறலாய்
நித்திரை தழுவுகையில் பிம்பமாய்
எழும் நினைவுகள்
உறங்காத சில இரவுகளின்
கசப்பு நிகழ்வுகளையும்
சிரிப்பில் கழிந்த இன்பங்களையும்
அன்னை பாடிய தாலாட்டின் அமைதியையும்
நண்பனுடன் செய்த குறும்புகளையும்
நிதானம் வழுவி செய்த குற்றங்களையும்
தன்னில் சுமக்கின்றன
வாழ்ந்த நாட்களின் உயிர் சான்றாய்
அதில் சில கசப்பாயினும்
அவை வாழும் என்றும்
இதய பெட்டகத்தில்
என்றும் இறவாத ஞாபகமாய்!



priyadharshni.k
1 yr B.A
department of history
PSGR Krishnammal college for women,
peelamedu ,
coimbatore-4

எழுதியவர் : ஷியா குமரன் (பிரியதர்ஷனி க (19-Oct-14, 5:20 pm)
பார்வை : 86

மேலே