நெஞ்சம் வலிக்குதடி உன் மௌனத்தால்
நெஞ்சம் வலிக்குதடி
உன் மௌனத்தால்
கெஞ்சி துடிக்குதடி
காதலை நீ மறுத்தால்
தினம் தினம் உளரும் கவிதை
உன் கண்களால் வந்த போதை
நீ மறுக்கும் காரணம் சரியல்ல
என்றுமே நான் ஒரு ஏழை
உன் சம்மதம் தானே வரவு
அதற்கென ஆகும் செலவு
உயிரென்றாலும் கொடுக்க
இருப்பதே ஒரு கனவு
காதலினால் ஒரு கோட்டை
கண்களினால் ஒரு சாட்டை
நடத்துகிறாய் நீ வேட்டை
தப்பி செல்லும் மானாய்
இருக்கிறேன் காதல் என்னும் காட்டில்