என் அருள் அம்மாவுக்கு

அம்மா.........
உன் இதய கருவில்
இருக்கவே ஆசை படுகிறேன் ............
இதய துடிப்பின் மறைவில்,
உன் ஆயுளை கூட்ட!
உன் கண்ணின் கருவிழியில்
இருக்க ஆசை படுகிறேன் ..........
கண்ணிற் துளிகளில்
என்னை சிந்துவதற்கு !
உன்னை விட்டுத்தரமாட்டேன்-யாருக்கும்
என்னை எட்டி பிடித்த உன் கைகளை
தொட்டு தழுவிய பிறகு ,......
வருவேனேம்மா உன்னோடு..
தருவேனம்மா என் உயிரோடு ..............
என்றும் புன்னகையுடன் ,
உன் இதய மகள்