பேரழகி

நடக்கும் நடையினில்
என்னில் உடைகிறேன்
உந்தன் இடையினில்
என்னை இழக்கிறேன்
உரசிப் போகிடும்
ஆடைதனில்
எந்தன் ஆயுள்
கரைக்கிறேனே!..

பார்க்கும் பார்வையில்
ஆசை பதிக்கிறாய்
சிரிக்கும் சிரிப்பினில்
உயிரை பறிக்கிறாய்
காதல் கொடுத்தென்னை
காவு கேட்கிறாய்
வாழ்க்கை இனித்திடுதே..

உந்தன் விழி இங்கு
தூண்டில் முள்ளாய்
என்னை இழுக்கிறதே
பிறந்த பலனை
அடைந்தது போலே
உள்ளம் குதிக்கிறதே

உந்தன் அழகினிலே
தினமும் செத்து பிழைத்தேனே...

எழுதியவர் : தவம் (15-Dec-14, 1:20 pm)
Tanglish : peralagi
பார்வை : 137

மேலே