இறைவனோடு பேசுகிறேன் - இறை மொழி என்பது இசை

இசையை காதலிக்கிறேன் - என்
இதயத்துக்குள் தென்றல் வீசுகிறது.....!

இறைவனோடு பேசுகிறேன் - எனக்கு
இப்பிறவி வரமாகிறது

இனிமையை புரிந்து கொள்கிறேன் - எனக்கு
இந்த பூமி சொர்க்கமாகிறது...

இதமாக நான் பழகுகிறேன் - மண்ணில்
இருக்கும் உயிர்கள் சொந்தமாகிறது ...!!

இந்த நான் என்பது என்ன என்று எனைப் பூட்டி
இருக்கும் உடம்பிடம் கேட்கிறேன்....

இதுவும் ஒரு நாள் காற்றிலே கலக்கும் அதனால்
இதுவும் இசையின் இலக்கணம் என்கிறது....!

இனிமேல் எனக்கு அழிவில்லை என்று உணர்கிறேன்
இதோ இறைவோடு இப்போதும் பேசுகிறேன் - இசை மூலமாக...!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (20-Dec-14, 8:52 am)
பார்வை : 148

மேலே