உனக்காகவே வாழ்கிறேன்

தென்றலாய் நீ என்னை தொட்டு
தேனாய் என்னுள் நீ இனித்து
சுவையாய் என் நாவில் நீ இருந்து
என் இதயத்தை நீ இன்பத்தில் நனைத்து.

என் காதலி நீயே என்று
கனவில் உன்னை நான் சுமந்து
கற்பனையில் உன்னோடு நான் வாழ்ந்து
கடைசி வரை நீயே என்று.

நினைவலையில் நான் நனைந்து
நித்திரை இல்லாமல் நான் அலைந்து
நீ தான் வேண்டும் என்று
நிலையாய் நிற்கிறேன் உனக்காக நான்.

உறுதியாய் சொல்லிவிடு
உண்மையாய் காதலிக்கிறேன் என்று
உடலும் உள்ளமும் உன்னையே
நினைத்து உயிர் வாழ்கிறேன் நான்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (14-Jan-15, 11:30 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 530

மேலே