சிறப்பானவள் நீ தானே

சில சமயங்களில் உன்
சிந்தனைகள் மட்டும்
சில வினாடிகளாய் என்னை
சிந்திக்க வைக்கிறது.

சிந்தித்த நேரங்களில்
சிறப்பாய் தெரிகிறாய் என்
சிந்தனை நாயகியாய் நீ
சிரித்து மகிழ்ந்து கொண்டு..

சிந்தித்து சொல்லி விடு
சிலை வடிக்கிறேன் உனக்கு
சிந்தனை சிலையாய் நீ எனக்கு
சிறந்த மனைவியாய் வருவதற்கு..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (20-Jan-15, 3:30 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 79

மேலே