மதிப்பற்ற உயிர்கள்‘

உறையும் குளிரில்
உள்ளமும் நடுநடுங்குகிறது
உறவுகளின் உணவுகளுக்கு
உயிரும் இங்கு பிரிகிறது


தேசமிது பாலைவனந்தான்
பணத்தின் சோலைவனமானதில்
அதிஉச்ச சூடும் அதிரும் குளிருமாய்
அவதிகளால் அல்லலுமதிகம்


முப்பது வயதானவருக்கு
மூச்சு முட்டியதால் - இவ்
உலகவாழ்வை முடித்துக்கொண்டாராம்
கேட்டதில் மூச்சே இறுகிப்போனது....


அச்சம் எதிர்காலத்திலாக்கி
அதிக சிரத்தை நிகழ்காலத்தோடாகிறது
உணர மறுக்கும் உள்ளங்களால்
உயிர்களுக்கும் மதிப்பற்றதாகிவிட்டது.

எழுதியவர் : ஹாசிம் (22-Jan-15, 11:03 am)
சேர்த்தது : ஹாசிம்
பார்வை : 53

மேலே