என் உயிர் நண்பனை போல்

நான் சிரிக்கிறேன் ...
அவனும் சிரிக்கிறான் ...
நான் அழுகிறேன் ...
அவனும் அழுகிறான் ....
நான் பேசுகிறேன் ....
அவனும்பேசுகிறான் ....!!!

நான்
போட்ட உடைபோல் ...
அவனும் போடுகிறான் ....
நான் மறையும் போது ...
அவனும் மறைகிறான் ...
அட பாவியே நான் ...
கண்ணாடி முன் நிற்கிறேன் ...!!!

ஒரு நல்ல நண்பன் ...
கண்ணாடி போல் இருக்கவேண்டும் ...
என் உயிர் நண்பனை போல் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

எழுதியவர் : கே இனியவன் (27-Jan-15, 10:36 pm)
பார்வை : 200

மேலே