அவலப்பட்டியலு நீளுது

செத்து கெடக்குது என் சமுதாயம்! - அது
சாவுலியும் தேடுது ஆதாயம்!

எல்லாரயும் புடிச்சிருக்கு பணப்பேயி! - பணம்
இல்லாத மனுசனுக்கு மனநோயி!

எழுந்ததும் போட்டுக்குறான் முகவேசம்!- தான்
பொறந்ததும் மறந்திடுறான் தாய் பாசம்!

வசதியா வாழுறான் பொய்பேசி ! - ஓஞ்சி
அசதியா கெடுக்குது இவன் கைப்பேசி!

குப்பையெல்லாம் கொட்டி வப்பான் உள்ளத்தில! - தன்னை
பெத்தவங்கள உட்டுடுவான் முதியோரில்லத்தில!

இந்த அவலப்படியலு நீளுது! - ஐயோ
உலகத்தில மனுசம் மாளுது!

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (30-Jan-15, 5:19 pm)
பார்வை : 81

மேலே