ஆதலால் காதல் செய்வீர்-மண் பயனுற வேண்டும்

பிரபஞ்சத்தின் உருவாக்கம் எவ்வாறென்றெண்ணிக் கொண்டிருந்த போது...
அந்தப் பார்வை, ஆம்! அந்தப் பார்வையால்,
என்னுள் ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்ததை உணர்ந்தேன்!
அந்தப் பார்வையின் வெப்பம் மெல்ல மெல்லச் சுருதி குறைந்து
குளிர்ந்து, என்னையும் குளிர்வித்த போது
என்னுள் அந்த முதல் காதல் உயிர் பெற்றது!
அடுத்தடுத்த சந்திப்புகளால்
காதலின் பரிணாமம், மனித நிலையைத் தாண்டி,
தெய்வீக நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நேரம்,
மிச்ச மீதி இருக்கிற மனித விலங்குகள் சில,
எங்கள் காதலுக்கு விலங்கிட்டன
என்னவளுக்கு கால்கட்டென ஓர் விலங்கிட
இந்தப் பிரபஞ்சமே என்னுள்ளே சுருங்கி
கரும்பள்ளமென சூன்யமாகிவிட
அந்தக் காதல் மட்டும் கடவுளாய் என்னோடு
என்றும்,என்றென்றும்
கடவுளைக் காண வேண்டுமா? காதல் செய்வீர்!
ஆதலால் காதல் செய்வீர்!

எழுதியவர் : ஆ.நிக்கல்சன் (6-Feb-15, 9:06 pm)
சேர்த்தது : நிக்கல்சன்
பார்வை : 69

புதிய படைப்புகள்

மேலே