கைம்மாறு

புதுப்பித்த என் சிதைந்த
பக்கங்கள்.
ஒளிரும் என் இருண்ட
கனவுகள்.
புத்துயிர் கொண்ட என்
தசை நரம்புகள்.
என் வாழ்வுக்கு அர்த்தம் தந்த உன்
உணர்வுகள்.
உயிருள்ளவரை மறக்கமுடியா உன்
அன்பு மலர்கள்.
உந்துகின்றன என் உள்ளுயிர் துடிப்புகள்
கைம்மாறு செய்யும்பொருட்டு.

எழுதியவர் : jujuma (22-Apr-11, 12:32 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 372

சிறந்த கவிதைகள்

மேலே