காக்கைச் சிறகினிலே -இன்னும் சற்று நொடிகளில் போட்டிக்கவிதை
யார் சொன்னது...??
அது பொதுக் கழிப்பிடம் தான்,
அந்த ஒரு தகுதி போதும்
அதை சீரழிப்பதற்கு...!!
அவசரமாக இருப்பதே
அங்கு தலையாய பிரச்சினை,
பொதுவாக இருப்பதால்
பொதுநலக் கவலையில்லை..!!
ஆத்திரம் அதிகமாகி
அதை அடக்க முடியாத
சிறு(நீர்)பிரச்சினையில்
பெருமூளை அறிவிழக்கிறது..!!
அங்கே நாற்றமென்பது
கழிப்பிடம் சார்ந்தது அல்ல,
இடம் தேடிப் போகும்
மனித மனம் சார்ந்தது..!!
முகம் சுழித்தாலும்
மனம் மாற மறுக்கிறது...!!
முதல் முறை அனுபவமே
மூச்சுத் திணறும்,
இருந்தும் ஒவ்வொருவரும்
திட்டிக் கொண்டே
அதேயே செய்து முடித்து
வெளியேறி வருகிறார்கள்..!!