திரை வரி -நல்ல நல்ல நிலம் பார்த்து

கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து
கற்பு நிலை தவறாது
காதல் பயிர் வளர்த்து (2)பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து(2)
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
---அர்த்தம் பொதிந்த வரிகள் விவசாயி படம்

எழுதியவர் : (20-Feb-15, 1:36 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 81

சிறந்த கவிதைகள்

மேலே