பிம்பத்தின் பிரிகையில் - இராஜ்குமார்

பிம்பத்தின் பிரிகையில்..
~~~~~~~~~~~~~~~~~~

திரளும் கருமையில்
தாகத்தின் தீபமாபவள் ..

தீபத்தின் தேகத்தில்
விழியெனும் சுடராபவள் ...

சுடரின் நுனிக்குள்
வெட்கத்தின் விரலாபவள் ...

விரலின் நடனத்தில்
ஆன்மாவின் தேடலாபவள் ..

தேடலின் மீதத்தில்
முடிவிலியின் வேகமாபவள் ..

வேகத்தின் சுழற்சியில்
பிழையிலா பிம்பமாபவள் ..

பிம்பத்தின் பிரிகையில்
ஊடகத்தின் உயிராபவள் ..

உயிரின் உணர்வினில்
மரணமிலா காதலாபவள் ...

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (22-Feb-15, 6:50 am)
பார்வை : 90

மேலே