நானெழுதிய கவிதை

எனக்கும் இந்த கவிதைக்கும்

எந்த பேதமுமில்லை ..

என்னை போலவே இருக்கும் ,,

பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் ..



தன்னை எழுதி

தொலைந்து போக வைத்த

கவிஞனை தேடி அலையும்

ஓர் கவிதையின் கதை.....

------------------------------------- **------------------------------------



மறதி வரம் தான்

அவள் ஞாபகம் வராத வரை ...


------------------------------------- **------------------------------------


நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , ,

கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய

பாடலின்

"முதல் வரியாக "........

------------------------------------- **------------------------------------

கவலைபடாதே

உன்னை பற்றியும் , என்னை பற்றியும்

இல்லை இந்த வரிகள் ...

அவனை பற்றியும் அவளை பற்றியும் ... ஆனால்

இங்கே நீயும், நானும்

அவள், அவனாய்

------------------------------------- **------------------------------------

இயங்கும் படிக்கட்டில் (escalator )

நம் முதல் பயணத்தில்

நீ தடுமாறி என் கையை பிடித்த படியில்

தடுமாறி போனேன் நான்..

இன்னுமும் பிடித்திருகிறது , அந்த பிடி என் இதயத்தை ....

------------------------------------- **------------------------------------

ஓர் இரவு உணவு வேளையில்

உனக்காக சைவமான நான்,

இன்னுமும் அசைந்து கொடுக்கவில்லை அசைவமாக....

------------------------------------- **------------------------------------

உன்னை பற்றி மட்டும் ஓர் கவிதை கேட்டாய்,

நீ காதலை வெளிபடுத்திய விதம்

அழகாய் இருந்தது உன்னையும் விட ......

------------------------------------- **------------------------------------

காதல்

சொல்வதில் , எற்றுகொள்வதில்

மட்டுமில்லை

விலகி செல்வதிலும் இருக்கிறது வலுவாக வலியாக ...

நான் விரும்பியும் விலகிசென்றேன்

நான் விரும்பியே விலகிசென்றேன் ...

------------------------------------- **------------------------------------

ஒரு வேளை நீ கேட்டதும்,,

அந்த கவிதையை

எழுதி கொடுதிருந்தால்,, இல்லை

விலகி சென்றவுடன்

உனக்காய் "உன்னை மட்டும் பற்றி "

எழுதியதை கொடுத்திருந்தால்...



அவள் வாழ்க்கையும் , அவன் வாழ்க்கையும்

நம் வாழ்கை ஆகி இருக்குமோ !!

------------------------------------- **------------------------------------

அவன் எழுதாமல் தொலைத்த கவிதை அது

எனை எழுத வைத்து "தொலைந்த " கவிதை நீ

அந்த கவிதையை எழுதி தொலைத்தக் கவிஞன் நான்

------------------------------------- **------------------------------------

இன்னுமும் என் கவிதைப் பட்டறையில்

துரு ஏறாமல் இருக்கிறது

"அந்த கவிதை "

இல்லை இல்லை

இன்னுமும் என் கவிதைப் பட்டறையை

துரு ஏற்றாமல் வைத்திருக்கிறது

"அந்த கவிதை "

------------------------------------- **------------------------------------

நீ வந்த சுவடுமில்லை,

போன வடுவுமில்லை ,,

வலி மட்டும் இருக்கிறது, வலிக்கிறது

------------------------------------- **------------------------------------

நாம் விலகியவுடன்,

இல்லவே இல்லை

நான் விலகியதும்,

வளரவும் இல்லை,

சிதையவும் இல்லை ,

புதையவும் இல்லை ,

அப்படியே இருக்கிறது ....உன் மீதான

"என் காதல் கரு "

------------------------------------- **------------------------------------

உன் திருமண அழைப்பிதழாய்

எனக்கு அனுப்பிய அந்த பாடல் ....

பார்த்ததும் , கேட்டதும் புரிந்து கொண்டேன்

அவளாய் இருந்து

நீயாய்

மாற தயாரகிவிட்டாய் என ,....

------------------------------------- **------------------------------------

உன் திருமணத்திற்கு பின்

நாம் சந்தித்த ஓர் சந்திப்பில்

நலம் விசாரித்தாய்

என்னை பற்றி ..

முன்பு உனக்கு என்னிடம் பிடித்த ,

பின்பு பிடிக்காமல் போன

அதே குறுஞ்சிரிப்பு உனக்கு பதிலாய்...

------------------------------------- **------------------------------------

இந்த கவிதையை நீ எங்கேனும் , என்றேனும்

படிக்கச் நேரலாம்,

உன் மனம் நொந்தால் மன்னித்து விடு ...


என்னிடம்

மன்னிப்பும் கேட்டு விடு,,

என்னிடம் கவிதை கேட்டு சென்றதிற்கும்,,

நான் கவிதை எழுதும் முன் சென்றதிற்கும் ...

------------------------------------------------------ **--------------------------------------

எனக்கும் புரியும்

இனி நீ அவளாகமுடியது

நான் அவனாகமுடியாது ....

அனால் , நான் அவனோடுதான் ....


உன் ஞாபகம் "மறந்து போகும் " வரை , அல்லது

உன் ஞாபகம் "மறுத்து போகும் " வரை ,அல்லது

உன் ஞாபகம் "மரத்து போகும் " வரை ..

------------------------------------- **------------------------------------

இதுதான்,,

நான் உனை வைத்து

எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...

நீயன்றி எழுதினால்,,

அது எப்படி கவிதையாகும்?!!

அநேகமாக,,

இதுவே

என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....

------------------------------------- **------------------------------------

கருவில் கலைந்த குழத்தை போல் தான்

என் காதல்..மீள்வது கடினம்தான்,

நான் மீண்டு கொண்டிருக்கின்றேன்

------------------------------------- **------------------------------------

நான் அவனை முழுதாய் மீட்டுக்கொண்டிருகிறேன்,,

அவன் மீண்டு கொண்டிருக்கும்போது

நீ மீண்டும் வந்திராதே இப்பிடி

எனக்கு நீ அனுப்பிய பாடலின்

"முதல் வரியாக "....

------------------------------------- **------------------------------------

எழுதியவர் : (6-Apr-15, 8:52 pm)
சேர்த்தது : viswa 32
பார்வை : 99

மேலே