நாட்டாமைப் பிள்ளை
![](https://eluthu.com/images/loading.gif)
நாலு காசு திருடியதாம்
.......நாட்டாமைப் பிள்ளை;
நாலு பேர்க்கு பங்கு தந்தால்
.......நல்ல பிள்ளையாம்..!
தற்கொலைக்குத் தூண்டியது
.......கச்சிப் பணிக்கு சரியாச்சு;
கொன்றால் கொன்றால் வந்த பாவம்
.......தின்றால் தின்றால் தீர்ந்திடுச்சு ..!
பல காலம் படுத்திருந்த
.......நீதித் தேவதை....
பல் விளக்க எழுந்ததுதான்
......பெரிய சாதனை....!
திரும்ப- இது.....
கோழித்தூக்கம் போடுமோ?
......கும்பகர்ணன் ஆகுமோ?
ஏழரைகள் வீழுமோ?
.......“எங்கம்மா” சொல்லுமோ?