ஓரப் பார்வை

உன் ஓரப் பார்வையில்
புழுதியில் கிளம்பிய சருகாய்
வானத்தில் பறக்க
பத்தே வினாடி மழையாய்
மனதுக்குள் பெய்ய
ஒற்றை நொடியில்
பனியாக உறைந்து விட்டேன் -இன்று
உன் நினைவால்
நீர்க்குமிழ் போல
கண்ணீரை சிந்திக்கொண்டு
சிலையாக மாறிவிட்டேன்
சிதைந்து போன -என்
மனதின் காயங்களை ஆற்ற

எழுதியவர் : கீர்த்தனா (9-Apr-15, 5:32 pm)
பார்வை : 650

மேலே