திருமணத்திற்க்கு முந்தைய நாள் இரவு ஆண்

திருமணத்திற்க்கு முந்தைய நாள் இரவு ...ஆண்

நாளை எனது திருமணம் ...
உள்ளம் வெடிக்கும் மகிழ்ச்சி !
என்னில் பாதியை உரிமை கொள்ளும் நிகழ்ச்சி !
கண்ட கானக்களை நிஜத்தில் காணும் நெகழ்ச்சி..!
ஆனால் என் மனமோ என்னவளை விடைகளாக தேடும் வினா புத்தகமா மாறியதற்கு இங்கு நீங்களே சாட்சி..!!

யார் அவள்..
பல நூறு பெண்களை கடந்து வந்த கண்களை அவள் மீது பதியமிட செய்தவளோ..
முக்குச் சந்தில் காதலை சொன்னபோது அண்ணா என்று அழைத்த சரண்யா..
தெருவில் சும்மா பார்த்ததற்கே முறைத்த ஜெநிஃபெர் ..
தங்கையை பார்க்க வரும் பக்கத்து வீட்டுப் பெண் நிஷா…
இவர்களை விட அழகானவாளோ….

தாயின் மார்பில் முகம் புதைக்கும் வாசனை இவளிடம் வருமோ…
தங்கையுடன் இடும் அடி பிடி சண்டைகள் இவளிடம் அடங்குமோ..
அப்பாவிடம் உண்மையாய் சொன்ன பொய்கள் இவளிடம் வாய்க்குமோ..

என் வியர்வை நாற்றத்தில் மல்லிகைப் வாசத்தை கலக்க வந்தவள் இவள் தானோ ..
என் கனவு, புகழ், வெற்றி இவை எல்லாவற்றிற்கும் ஊன்று கோல் இவள் தானோ …
என் வல்லினத்தையும் மெல்லினத்தையும் தன் இடையில் சுமக்கும் உரிமம் பெற்றவளோ..

ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்பாரே ..
ஊரைக் கூட்டி திருமணம் செய்யும் இவள்
என்னை அன்பு என்னும் தேரில் சுமப்போளோ.. இல்லை
சொல் அம்பு என்னும் தேளாய் கொட்டுவாளோ ..

சமைக்க அறிவாளோ ..சம்பளத்தை முழுமையாய் தருவாளோ..
என்றேனும் நண்பர்களுடன் தண்ணி அடிக்க விடுவாளோ… இல்லை
தினம் குடி தண்ணிர் எடுக்க விடுவாளோ..

போய் அவளிடமே கேட்போம்..
அவள் அம்மா அருகில் உறங்குவளோ..
ஒரு ஆசிரீரி..
காலை மணி 6 ஆச்சு கிளம்பிட்டயா.. 6.30க்கு முகூர்த்தம் ..

எழுதியவர் : சோபியா இன்பராஜ் (10-Apr-15, 5:39 pm)
பார்வை : 105

மேலே