03052015 - சித்ரா பௌர்ணமி அன்று சித்திர குப்தனை வணங்குவோம்
சித்திரத்தின் நாயகன்,
சிகரத்தின் புத்திரன் ,
சித்ரகுப்த்தன் எனும் பெயரினன்.
சித்திரை பௌர்ணமியில் ,
நலம் காக்க வந்துதித்தனன் .
சிறப்பாய் நாம் வாழ்ந்து,
பொறுப்பாய் இருப்பது நம் கணக்கு.
நல்லவை வரவிலும்,
தீயவை செலவிலும் ,
வைத்து நம் கணக்கை,
பார்ப்பது அவன் பொறுப்பு.
காலனின் கணிப்பில்,
நேரங்கள் தப்புவதில்லை,
காலங்கள் மாறுவதில்லை,
இவையாவும் சித்திரகுப்தனின் சிறப்பு.
இருக்கும் காலத்தில்,
இல்லாதவை மறந்து,
இருப்பது நினைத்து,
இனிமை சேர்ப்பது,
நலமான வாழ்க்கைக்கு உரமாகும்.
உன்னதம் உயர்வாகும்.
சித்திரை நாயகனை,
சிந்தையில் வைத்து,
பௌர்ணமி நன் நாளில்,
வளம் தந்திட வணங்குவோம்,
வாழ்வுக்குப் பின் சுகம் தந்திடுவான்.
சந்ததிகள் நலம் காத்திடுவான் .