உண்மையும் பொய்மையும் …

உண்மைகள் ….
அரிதாரம் வந்ததும்
மெதுவா நழுவியே போச்சு…..!
வெகுமானம் கூட
பொய்மைக்கே உறவாய் போச்சு ….!

ஆயிரம் உண்மைகள் கூட
மாறிடும் ஒரு நொடியில் …
காரணம் ஏதும் கேட்டால்
கடைசியில் சொல்வதும் பொய்யே …!

நம்பிக்கை கூட
பொய்மையில் தேங்கி நிற்க ….
எந்த கை இனி நல்ல கை
பட்டபின் தான் புத்தி சொல்லும் ….!!

எழுதியவர் : வீகே (9-May-15, 2:37 pm)
பார்வை : 115

மேலே