அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு…

குரு என்னும் வார்த்தைக்கு
உருக் கொடுத்த உன்னதமே !
ஏடு தூக்கும் மாணவர்களை - நாளை
நாடு காக்கும் நல்லோராய்
சிந்தனைச் சிற்பிகளாய்
சாதனைச் செல்வங்களாய்
சுதந்திர நாட்டிற்கு வளம்சேர்க்க
வார்த்தெடுக்கும் வள்ளலே !

அருங்கல்வியைப் போதித்து
அனுபவங்களைப் பகிர்ந்து
ஆயகலைளைக் கற்பித்து
வாழ்விற்கு வழிகாட்டும்
வாழ்வியல் புத்தகமே - உம்மை
வாழ்த்துவோம் நித்தமுமே !

எங்கள் வாழ்வுப் பயணத்தில்
ஏணிப் படியாயிருந்து
எதிர்பார்ப்பு இல்லாமல் - எங்களை
ஏற்றமடைய வைத்த ஏந்தலே !
உம் வார்த்தைகளின் வழி நடப்போம்
எம் வாழ்வதனில் தடம் பதிப்போம்


-அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (21-May-15, 5:14 pm)
பார்வை : 8260

மேலே