கனவு நாள்

உன் வாழ்வு நானாக வேண்டும்
என் தேடல் நீயாக வேண்டும்
படர்ந்த வானம் நம் கூரை
நித்தமும் நினைக்க வேண்டும் உனை

மௌனம் நம் மொழியாக வேண்டும்
காற்று நம் வழியாக வேண்டும்
தென்றல் எனை தாலாட்ட வேண்டும்
உன் விரல்கள் எனக்கு மைசூட்ட வேண்டும்

நீண்ட தூரம் உன் கைக்கோர்த்து
பூக்கள் படர்ந்த சாலைகளில்
நிசப்தம் நிறைந்த வேளையில்
நீங்கா நிலவு ஒளியில்

நெஞ்சை தொட்டு சொல்லு
நிலவு உண்டா எனில்
நிலவே உன் முகம் பார்க்க
இந்த பயணம் என்பேன்

நித்தமும் உன் நினைவு
நெஞ்சுக்குள் நூறு கனவு
வந்து சேரும் நாள் தெரியவில்லை
வழிப்பார்த்து காத்திருப்பேன் !!

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (13-Jun-15, 9:55 pm)
Tanglish : kanavu naal
பார்வை : 111

மேலே